அவிநாசி, பெரிய கருணைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இருதயம் மற்றும் பல்நோக்கு மருத்துவம் சார்ந்த, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அறக்கட்டளை, ஐ பவுண்டேஷன், ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பாரத் நிறுவனம் மற்றும் வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய முகாமில், ஏராளமானோர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர். வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி தலைமை வகித்தார். துணை தலைவர் விஜயலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE