சாத்துார் : கால்களை பதம் பார்க்கும் ரோடு ,நாய்கள் தொல்லை,முறையான சாக்கடை வசதி இல்லாமை போன்ற பிரச்னைகளால் சாத்தூர் பெரியார் நகர் பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
வளர்ந்து வரும் இந்நகரில் தெருவிளக்குகள் எரியாது இரவு நேரத்தில் நகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.குப்பைத்தொட்டி வசதியில்லாததால் காலியான இடங்களிலும் ரோட்டின் ஓரத்திலும் குப்பை கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நகரின் ஒரு பகுதியில் ரோடுகள் போடப்பட்டும் மற்றொரு பகுதியில் ரோடு போடப்படாமலும் விடப்பட்டுள்ளது. இதனால் கற்கள் கால்களை பதம் பார்க்கும் நிலையில் உள்ளது.
பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். நகருக்குள் செல்லும் அண்ணாநகர் ஓடை, மரிய ஊரணி ஓடை தூர்வாரப்படவில்லை. இதில் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.தனியார் நீச்சல் குளம் அருகே இளைஞர் விளையாட்டு திடல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதோடு திடலில் கட்டுமான பொருட்களை கொட்டி வைத்துள்ளதால் இளைஞர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE