ஓமலுார்:முதல்வரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில், பணிக்கு வந்த விமானியை, முதல்வர் பாராட்டினார்.முதல்வர், பழனிசாமி. சேலத்தில் இருந்து விமானம் மூலம், சென்னை சென்றார். முன்னதாக, விமானி கோபிநாத், 35, முதல்வரிடம் வந்து, 'சேலம் மாவட்டம், குறிச்சியைச் சேர்ந்தவர்' என, அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து, 'காலை, எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், பணியை கேட்டு வந்தேன்' எனக் கூறினார்.அவரை, முதல்வர் பாராட்டினார். விமானம் புறப்பட்டதும், கோபிநாத், 'மைக்' மூலம், 'தமிழக முதல்வர், அரசு அதிகாரிகளுடன் பயணிக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பின், சேலம் விமான சேவையை கொண்டு வந்த, முதல்வருக்கு நன்றி' என, தமிழில் அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE