திருப்பூர்;சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தே.மு.தி.க., மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், திருப்பூர், ராயபுரத்தில் நடந்தது. இதில், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.கட்சி துணைச் செயலாளர் பார்த்தசாரதி, தேர்தல் பணிக்குழு செயலாளர் சந்துரு ஆகியோர் தலைமை வகித்து பேசுகையில், ''மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை நிர்வாகிகளின் பட்டியல் தயாரிக்க வேண்டும். அவர்களுடன் தனித்தனியாக ஆலோனைக் கூட்டம் நடத்த வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கையுடன் பூத் கமிட்டி அமைப்பதை தீவிரப்படுத்த வேண்டும்.வாக்காளர்கள், தேர்தல் அலுவலர்கள், ஓட்டுச்சாவடிகள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அளவில் சேகரிக்க வேண்டும்'' என்றனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன், வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் குப்புசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE