மூணாறு:கேரளாவில் 46 மையங்களில் நேற்று காலை 9:00 முதல் 11:00 மணி வரை இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
ஒவ்வொரு மையத்திலும் தேர்வு செய்யப்பட்ட 25 சுகாதாரத்துறை ஊழியர்களிடம் ஒத்திகை நடந்தது. தடுப்பூசி செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே சித்திராபுரம் சமூக சுகாதார மையம் இடுக்கி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தொடுபுழா முதலகோட்டம் ஹோலிபேமிலி மருத்துவமனையில் ஒத்திகை நடந்தது.
முதற்கட்ட ஒத்திகையின்போது ஏற்பட்ட சில குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு இரண்டாம் கட்ட ஒத்திகை வெற்றிகரமாக நடந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு 351457 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 167084 பேர் அரசு துறை சார்ந்தவர்கள். 184373 பேர் மற்றவர்கள் ஆவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE