பல்லடம்:பல்லடம் பகுதியில், படைப்புழு தாக்கம் காரணமாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். மக் காச்சோளம் பயிரிட விவசாயிகள் பெரிதும் யோசித்தனர். வேளாண் துறை நடவடிக்கைகள் காரணமாக, படைப்புழு பாதிப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், 'படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு, மருந்து தெளித்தல் உள்ளிட்ட வேளாண் துறையின் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி மக்காச்சோளம் பயிரிட்டோம்.படைப்புழுவின் தாக்கம் பெரிதும் குறைந்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் வழக்கத்தை விட கூடுதல் மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம். செப்., மாதம் சாகுபடி துவங்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள், அடுத்த மாதம் அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளது.தற்போது, குவின்டால் ஒன்று, 1,500 - 1,600 ரூபாய் வரை விற்பனையாகிறது. 1,800 ரூபாய்க்கு விற்றால் லாபம் கிடைக்கும். படைப்புழு பாதிப்பு குறைந்து விளைச்சல் அதிகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE