பெண்ணாடம்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பினுகுட்டன், 39; கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில், வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, நான்கு மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் இறந்தார். இவரது மகன் மற்றும் மகள், மதுரையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கியுள்ளனர்.பினுகுட்டன், பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை, அவரது அறையில், கைலியால் துாக்கு போட்டு இறந்து கிடந்தார். 'மனைவி இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்' என, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE