அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம், பொங்குபாளையம், வள்ளிபுரம், தொரவலுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க போலீசாரை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு காவலர் வீதம் 10 ஊராட்சிக்கு 10 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தந்த ஊராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள காவலரின் பெயர், அவரது மொபைல் எண் ஆகியவை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஆங்காங்கே பிளக்ஸ் பேனரை போலீசார் வைத்துள்ளனர்.கிராம விழிப்புணர்வு காவலர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் ஈட்டி வீரம்பாளையம் மற்றும் பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில் நேற்று நடந்தது.எஸ்.பி திஷாமிட்டல் பேசுகையில், ''கிராம விழிப்புணர்வு காவலர்கள் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில், செயல்படுவர். தீவிபத்து உள்ளிட்ட அவசர தேவைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்காகவும், இவர்களை அணுகலாம்'' என்றார்.மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், டிபன் பாக்ஸ், பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. டி.எஸ்.பி. பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE