தேவகோட்டை:தேவகோட்டை அருகே, கண்மாயில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே, கோம்பையைச் சேர்ந்த ஏழு குடும்பத்தினர், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பூங்குடி கிராமத்தில்,விறகு வெட்ட வந்துள்ளனர். இங்கு, ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியுள்ளனர். நேற்று மாலை, 5:30 மணிக்கு இவர்களின் குழந்தைகளான, புனிதவல்லி, 13; யோகேஸ்வரன் 8; இன்பத்தமிழன், 10, ஆகிய மூவரும், அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்று, நீரில் மூழ்கி இறந்தனர். வேலாயுதபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE