கூடலுார்:கூடலுாரில் தொடரும் மழையால், பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றில், நீர்வரத்து அதிகரித்து, தடுப்பணை குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் 'சப்ளை' பாதிக்கப்பட்டது.கூடலுார்- கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, நகராட்சி சார்பில் கிணறு அமைத்து, பல வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இதற்கு தேவையான நீரை, அதனை ஒட்டி செல்லும் பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, குழாய் மூலம் கிணற்றில் நிரப்பி வருகின்றனர்.இந்நிலையில், கூடலுாரில், கடந்த சில நாட்களாக இரவில் பெய்து வரும், மழையால், பாண்டியாறு-புன்னம்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று முன்தினம், தடுப்பணையிலிருந்து கிணற்றுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டது.தகவலறிந்து நகராட்சி ஊழியர்கள், நேற்று, தடுப்பணைக்குள் இறங்கி, குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைத்தனர். தொடர்ந்து, குடிநீர் சப்ளை வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE