கோத்தகிரி:கோத்தகிரியில் நேரு யுவகேந்திரா மற்றும் அகநாடு கிராம வாலிபால் நண்பர்கள் குழு சார்பில் நடந்த வாலிபால் போட்டியில், 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கீழ் கோத்தகிரி அம்மன் நகர் அணி மற்றும் சோலுார்மட்டம் ஒசஹட்டி அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்தது. இதில், 25;22, 25;12 என்ற புள்ளி கணக்கில், அம்மன் நகர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன் தலைமையில், கோவில் கமிட்டி தலைவர் தாமரை, நிர்வாகிகள் செந்தில், சசி குமார் ஆகியோர் பரிசு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE