ஊட்டி:ஊட்டி அரசு கலை கல்லுாரியில் கவிதை நுால் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.ஊட்டி அரசு கலை கல்லுாரியில் உதவி பேராசிரியர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான 'பெய்தநுால், 'நுால் மழ' என்ற பெயரில், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.தொடர்ந்து, கேரள அரசின் தமிழ் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. இந்த கவிதை நுால் வெளியீட்டு நிகழ்ச்சி, அரசு கலை கல்லுாரியில் நடந்தது. தஞ்சை பல்கலை., அறிவியல் தமிழ் துறையின் தலைவர் தியாகராஜன் இதனை வெளியிட்டு, மணிவண்ணனுக்கு பாராட்டு தெரிவித் தார். ஊட்டி கல்லுாரியின் தமிழ் துறையின்தலைவர் முருகேசன், பேராசிரியர்கள் தர்ம ராஜ், தர்மலிங்கம், ரவிக்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE