ஊட்டி:நீலகிரி மலைப்பாதையில் கடும் மேகமூட்டத்தால் வாகன இயக்கம் பாதிக்கப்பட்டது.நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக நகர் மற்றும் ரூரல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் மேக மூட்டம் நிலவுகிறது. நேற்று, காலை நேரத்தில், தொடர் சாரல் மழை பெய்தது. கடும் குளிர் நிலவியது. நேற்று, காலை, 8:00 மணி நிலவரப்படி, குன்னுாரில் அதிகபட்சமாக, 44 மி.மீ., மழை அளவு பதிவாகி இருந்தது. ஊட்டி, குன்னுார், மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில், கடும் மேக மூட்டம் நிலவியது. பகல் நேரத்திலும், மலைப்பாதையில் முகப்பு விளக்கை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE