கூடலூர்: ஒன்பது மாத இடைவெளிக்கு பின், நாளை, முதல் முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக, கடந்த மார்ச் 15 ம் தேதி முதல் சுற்றுலா பணிகள் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி, யானை சவாரி ரத்து செய்யப்பட்டது. மேலும், இங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா விடுதிகளும் மூடப்பட்டது.
இந்நிலையில், ஒன்பது மாத இடைவெளிக்கு பின், நாளை, முதல் முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'அரசின் வழிகாட்டுதல் மற்றும் வழி முறைகளைப் பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். வாகன சவாரியில் 50 சதவீதத்தை இருக்கைகளில் மட்டும் சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்' என, கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE