நீர்நிலை அமைப்புகள் சார்பில், நாளை, குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.கோவை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளை மேம்படுத்தும் பணியில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு உட்பட, 14 அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில், வரும் 10ம் தேதி 'கவுசிகா நீர் கரங்கள் குடும்ப சங்கமம்' என்னும் விழா நடக்கிறது.காலை 7:30 மணிக்கு, காலிங்கராயன் குளத்தில் உள்ள கன்னிமார் கோவிலில், பொங்கல் வைத்தல், உறியடித்தல், மதியம் 2:00 மணிக்கு, குரும்பபாளையம், ஆதித்யா கல்லுாரி வளாகத்தில், விளையாட்டுப் போட்டிகள், 5:30க்கு, கலை நிகழ்ச்சிகள், பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில் பொதுமக்கள் பங்கேற்க, நீர்நிலை அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE