கருமத்தம்பட்டி:பாவு நுால் வாங்கி, ரூ.20 லட்சம் வரை கொடுக்காமல், மிரட்டல் விடுத்த இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சோமனுார் அடுத்த சேடபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். விசைத்தறிகளுக்கு பாவு நுால் வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், அன்னுார் அடுத்த பிள்ளையப்பம்பாளையத்தை சேர்ந்த தனபால், 38 ராஜ்குமார், 42 ஆகியோர், சில மாதங்களாக செந்தில்குமாரிடம் பாவு நுால் எடுத்து, வரவு, செலவு வைத்துள்ளனர்.இருவரிடமும், வாங்கிய பாவுக்குரிய பணத்தை செந்தில்குமார் கேட்டுள்ளார். இவர்கள், 20 லட்சம் வரை பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை கொடுக்க மறுத்து, இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். செந்தில்குமார், கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தனபால், ராஜ்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE