மேட்டுப்பாளையம்:நீலகிரி மாவட்டம், குன்னுார், கோத்தகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோத்தகிரி ஆறு, கல்லாற்றிலிருந்து வரும் மழை நீர், பவானி ஆற்றில் கலப்பதால், தண்ணீர் செந்நிறத்தில் பாய்கிறது. இந்த தண்ணீரை நகராட்சி நிர்வாகம் எடுத்து சுத்தப்படுத்தி, 33 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்கிறது. தண்ணீரை சுத்தம் செய்த போதும், குடிநீர் செந்நிறத்திலேயே உள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், ''தண்ணீரை நன்கு சுத்தம் செய்த போதும், செந்நிறத்திலேயே உள்ளது. அதனால் பொதுமக்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்த வேண்டும். மேலும் ஓட்டல்கள், பேக்கரிகளில், வாடிக்கையாளர்களுக்கு, குடிக்க சுடுநீர் வழங்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE