மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, பெள்ளாதி அண்ணாமலையார் திருமண மண்டபத்தில், தி.மு.க., சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.எம்.பி., ராஜா பேசுகையில், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று, பெரும்பாலான மக்கள் மத்தியில் எண்ணம் எழுந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை,'' என்றார்.காரமடை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE