பூர்னியா:பீஹாரில் உள்ள கிராமத்தில் எருமைகளை திருட வந்ததாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள பூர்னியா மாவட்ட கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு எருமைகளை திருட வந்ததாக நினைத்து மது போதையில் இருந்த மூவரை பொதுமக்கள் திரண்டு சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த ஷ்யாம் தேவ் யாதவ் பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.அவர்களில் ஒருவருக்கு கண்பார்வை பறிபோகும் அளவில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE