அனுப்பர்பாளையம்:மைசூரு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில், திருப்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.திருப்பூர் அருகேயுள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 பேர், நேற்று முன்தினம் சுற்றுலா வேனில் மைசூரு புறப்பட்டு சென்றனர்.வேன், நேற்று அதிகாலை, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் கிழக்கு கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்வர்ணாவதி அணை அருகே சென்றபோது, நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சுப்பிரமணி, 70, அவரது மனைவி அமிர்தா, 60, இவர்களது மகள் கோகிலா, 45, ஆகியோர், அதே இடத்தில் பலியாகினர்.டிரைவர் அருண்குமார் உட்பட, 14 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார், அவர்களை மீட்டு சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சாம்ராஜ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE