சென்னை:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநிலத்தில் நேற்று மட்டும் 64 ஆயிரத்து 231 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களில் கொரோனா குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 790 பேருக்கு கொரோனா உறுதியானது.இதுவரை 1.46 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் எட்டு லட்சத்து 24 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருந்தவர்களில் 897 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை எட்டு லட்சத்து ௫136 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.தற்போது 7432 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று எட்டு பேர் உட்பட இதுவரை 12 ஆயிரத்து 208 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE