கோவை:கோவை-ராஜ்கோட் இடையிலான சரக்கு ரயில் சேவை நேற்று இரவு துவக்கப்பட்டது.கோவை, வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குஜராத், ராஜ்கோட் சரக்கு ரயில் சேவை துவக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாஸ் சரக்கு ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், 2வது சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை இரவு, 8.00 மணிக்கு வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை, 5.00 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட் சென்றடையும். திருப்பூர் - வஞ்சிப்பாளையம், ஈரோடு - ஈங்கூர், சூரத் - உத்னா, அங்கலேஸ்வர் - பரு சந்திப்பு, ஆமதாபாத் - கங்காரியா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.மறுமார்க்கமாக வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் ராஜ்கோட்டில் இருந்து காலை, 8.00 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு, 8.35 மணிக்கு கோவை, வடகோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தடையும்' என்றனர். நிகழ்ச்சியில், கோட்ட வணிக முதுநிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட ரயில்வே அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE