லண்டன்:பிரிட்டனில் 'மாடர்னா' தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த அரசு நேற்று அனுமதி வழங்கியது.
அமெரிக்காவின் 'மாடர்னா' நிறுவனம் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி மருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இது 95 சதவீதம் செயல்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசி 'பைசர்' நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு மாற்றாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் மக்களுக்கு செலுத்த பைசர் தடுப்பூசிக்கும்; ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கும் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துக்கும் பிரிட்டன் அரசு நேற்று அனுமதி வழங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE