சசிகலா விடுதலையை முன்னிட்டு, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளை, உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவிக்கும் சசிகலா, வரும், 27ல், விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, மாவட்டச் செயலர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை, மாநில அரசின் உளவுத்துறை போலீசார் கண்காணிக்கின்றனர்.
சசிகலா, அவரது குடும்பத்தினருடன், கடந்த காலத்தில் தொடர்பில் இருந்தவர்கள், அவரால் பயனடைந்தவர்களை, தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.,க்களில், 32 பேர், தேர்தலின்போது, சசிகலா பக்கம் சாயக்கூடும் என, முதல்வரின் பார்வைக்கு தகவல் சென்றுள்ளது.எனவே, அவர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்து, உளவு அமைப்புகளின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE