சென்னை:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக, தி.மு.க.,வில், புதிய அணி துவக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் செயலராக, டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.,வில் வெளிநாடு வாழ் இந்தியர்களை உறுப்பினராக இணைப்பதற்கும், ஒவ்வொரு நாட்டிலும், தி.மு.க., அமைப்புகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற, புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் செயலராக, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான, டி.ஆர்.பி.ராஜா, இணை செயலர்களாக டாக்டர் செந்தில்குமார் எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE