மூணாறு : கேரளா நெடுங்கண்டம் அருகே ஆசாரிகண்டத்தில் கழுத்தில் கயிறு இறுக்கி பசு இறந்ததால் அதன் உரிமையாளர் சுகுமாரன் 69, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.அவர் வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் பசு மற்றும் கன்று ஆகியவற்றை மேய்ச்சலுக்காக நீண்ட கயிற்றில் கட்டி விட்டு சென்று விட்டார். பசுவை பார்க்கச் சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச்சென்றனர்.அங்கு கழுத்தில் கயிறு இறுக்கி பசு இறந்த நிலையிலும் அதன் அருகில் சுகுமாரனும் இறந்தும் கிடந்தார். பசு இறந்த அதிர்ச்சியில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE