இடையகோட்டை : இடையகோட்டையில் இருந்து கேதையுறும்பு செல்லும் ரோட்டின் இருபுறமும் செடிகொடிகள் ரோட்டை மறைப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
இடையகோட்டையிலிருந்து குளிப்பட்டி, புலியூர்நத்தம், முத்துநாயக்கன்பட்டி வழியாக கேதையுறும்புக்கு ரோடு செல்கிறது. ஒட்டன்சத்திரம் - கரூர் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. இதில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முன்னால் செல்லும் வாகனங்களால் ரோட்டை விட்டு கீழே இறங்க முடிவதில்லை.
ரோட்டுப் பகுதியை மறைத்தவாறு செடிகள் முளைத்துள்ளதால் ரோட்டின் எல்லை சரியாக தெரிவதில்லை. இதனால் ரோட்டின் வளைவுகளில் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ரோடு வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் செடிகொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE