செஞ்சி : வல்லத்தில் இந்தியன் வங்கி சார்பில் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடந்தது.
இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டலத்திற்கு உட்பட்ட வல்லம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் இந்தியன் வங்கி கிளைகள் சார்பில் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் விழா வல்லத்தில் நடந்தது.வேளாண் இணை இயக்குனர் ரமணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார். வல்லம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ரத்தின சவுபாக்கியவதி வரவேற்றார்.
ஆவின் துணை பொது மேலாளர் சுப்புராஜ், வேளாண் துணை இயக்குனர் ஜானகிராமன், வல்லம் பி.டி.ஓ., சம்பந்தம், கால்நடைத் துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை மற்றும் கறவை மாட்டுக் கடன்களை வழங்கினர். மேல்மலையனுார் கிளை மேலாளர் பாஸ்கர் இந்தியன் வங்கியின் திட்டங்கள் குறித்து பேசினார்.செஞ்சி கிளை மேலாளர் இலக்கியா தேவி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE