வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு இலவசஅரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்குவதாகஅறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேடசந்துார், கருக்காம்பட்டி, சித்துார், கல்வார்பட்டி, பூத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். டோக்கன் பெற தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தைமுறைப்படுத்தினர்.இது போன்ற அறிவிப்புகளை செயல்படுத்தும் போது, ஒட்டு மொத்தமாக அழைக்காமல் ஏரியா வாரியாக, ரேஷன் கடைகளைஅடிப்படையில் அழைத்து வழங்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE