கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு பதிவேடு குற்றவாளிகளை அழைத்து ஏ.டி.எஸ்.பி., சங்கர் அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் ரவுடியிசத்தில் ஈடுபட்ட வகையில், போலீஸ் ஸ்டேஷன் பதிவேடுகளில் 212 குற்றவாளிகள் உள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், ரவுடியிசத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யும் வகையில் போலீஸ் ஸ்டேஷன்களில் பராமரிக்கப்படும் பதிவேடு குற்றவாளிகளை அழைத்து விசாரணை செய்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்த விசாரணையில் 84 பேர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக நடந்த விசாரணையில் 30 பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி., சங்கர், குற்றவாளிகளிடம் இனி வரும் காலங்களில் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபட கூடாது என்று அறிவுரை வழங்கி, அவர்களின் மீதான குற்றங்கள் குறித்தும், வழக்கின் போக்கு குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வழக்கு நிலுவையில் இல்லாத தற்போது நன்னடத்தையுடன் உள்ள நபர்கள் மீதான குற்ற பதிவேட்டை நீக்க பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார்.நிகழ்ச்சியில், தனிபிரிவு ஆய்வாளர் சக்தி, உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE