திண்டிவனம் : குடும்ப பிரச்னையில் தீக்குளித்த கொத்தனார், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம் அடுத்த தீவனுாா் பள்ளி கூடத் தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை,50; கொத்தனார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், அப்பாதுரை, உடல்நிலை சரியில்லாததால், குடும்பத்தினரை ஊருக்கு வருமாறு அழைத்தார். ஆனால், யாரும் வரவில்லை. மனமுடைந்த அப்பாதுரை நேற்று முன்தினம் இரவு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.தீயில் கருகிய அப்பாதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE