சின்னசேலம் : சின்னசேலத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல் ஹக் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக டி.ஜ.ஜி., எழிலரசன் முன்னிலை வகித்தார். கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ், கலந்து கொண்டு பொதுமக்களிடையே பேசியதாவது கிராமங்களில் சட்ட விரோத செயல்கள், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க, கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், அடிக்கடி கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பார்கள், ஆகையால் இவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம். அது, போலீசாருக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE