ரிஷிவந்தியம் : சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் தேவச்சந்திரன், துணை தலைவர் சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அருணகிரி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் 155 பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கல்விதாசன், காளிமுத்து, பிரபு, பிரடாஜாய், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE