பேரையூர் : பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது. பலன் தரும் நிலையில் திருகல் நோய் ஏற்பட்டு வெங்காய பயிர் சேதம் அடைந்தது. நோய் தாக்கிய வெங்காய பயிரை வேரோடு பிடுங்கி வெளியேற்றினர்.
இதற்கிடையில் சில நாட்களாக தொடர் மழையால் தோட்டத்திற்குள் மழைநீர் தேங்கி நின்றது. வெங்காய பயிர் முழுவதுமாக அழுகி தரையோடு தரையாக சாய்ந்தன.விவசாயிகள் கூறுகையில், ''நோய் தாக்கிய வெங்காய பயிர்களை பிடுங்கி எறிந்தோம். மழையால் பயிர்கள் முழுவதோடு சேதம் அடைந்துவிட்டது. கடும் நஷ்டம் அடைந்துள்ளோம். தற்போது உழவு செய்து வெங்காய பயிர்களை அழித்து வருகிறோம். அரசு நஷ்டஈடு தர வேண்டும்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE