அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் அரசே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.இந்த ஆண்டும் அனைத்து சமூகத்தினரையும் சேர்த்து 8 பேர் கொண்ட கமிட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் முனியசாமி என்பவரை கமிட்டியில் சேர்க்காமல் கமிட்டியினர் தன்னிச்சையாக செயல்படுகிறது. இதை கண்டித்து அவரது தரப்பினர் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE