கள்ளக்குறிச்சி : பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடந்தது.
லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் வீரமணி வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினர். பொங்கல் விழாவினையொட்டி கல்லுாரி நிர்வாகம் சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில், கல்லுாரி துணை முதல்வர்கள் சிராஜிதீன், பிரகாஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள், கல்வி நிறுவனங்களின் ஓட்டுனர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE