கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆயுதப்படை போலீசாருக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் (மாஃப் ஆப்ரேஷன்) ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்துதல் (மாஃப் ஆப்ரேஷன்) ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம், பொதுக்கூட்டம் மற்றும் தேர்தலின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையில் கலவரம் நடந்தால் அதை தடுக்கும் விதம் குறித்தும், கலவரக்காரர்களை கட்டுப்படுத்துதல் குறித்தும் ஆயுதப்படை போலீசாருக்கு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில், கலவரக்காரர்களை எச்சரித்தல், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்தல், கண்ணீர் புகைகுண்டு வீசுதல், துப்பாக்கி சூடு நடத்துதல், பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராமநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE