சின்னசேலம் : சின்னசேலம் அருகே, குட்டையில் மீட்கப்பட்ட ஆண் சடலத்தின் அடையாளம் தெரிந்தது.சின்னசேலம் அடுத்த, பாண்டியன் குப்பம் எல்லை பகுதியில் கடந்த 4 ம் தேதி, அங்குள்ள குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வந்தனர். இறந்தவரின் தந்தை காணாமல் போன தனது மகனை பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் இறந்தவர் சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி, வடக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த கருப்பண்ணன் மகன் கர்ணராஜ்,43; என்பதும், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதும் தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE