சின்னசேலம் : சின்னசேலம் அருகே மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதுபோல் வீடியோ வெளியானதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் கடந்த 2 ம் தேதி பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 14 ஆடுகள் இறந்தன. மேலும் அதே பகுதியில் இதற்கு முன்பு இரண்டு முறை ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு வருவாய்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில் கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, தனியார் பள்ளி அருகே இரண்டு குட்டிகளுடன் ஒரு விலங்கு சுற்றுவதை கண்டு ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.பள்ளியில் சி.சி.டி.வி., கேமராவை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் விலங்கு ஒன்று், இரண்டு குட்டிகளுடன் செல்வது பதிவாகியிருந்தது. உருவம் தெளிவாக தெரியாததால் சிறுத்தை, கழுதை புலி அல்லது வேறு ஏதாவது விலங்காக இருக்கலாம், என்று சந்தேகிக்கின்றனர்.இரவு நேரங்களில் சுற்றித்திரியும் விலங்குகளை பற்றி தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக வருவாய்த் துறை அல்லது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE