லண்டன்: உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தற்போது உலக நாடுகளுக்கு இந்த உருமாறிய வைரஸ் பரவி வருகிறது.

சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் 70% அதிகம் பரவும் திறன்கொண்ட இந்த வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இதனால் சில நாடுகளில் பழையபடி சமூக விலகல் பின்பற்றப்படுகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
உலக நாடுகளின் பொருளாதாரம் மீண்டும் முடங்கிவிடுமோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் உருமாறிய வைரஸை போக்க, தாங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வீரியம் கொண்டதாக அமையும் என்று உறுதிபட தெரிவித்து இருந்தது.

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட சிலருக்கு பயான்டெக் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. சாதாரண கொரோனா வைரஸை அழிக்கும் அதே வீரியத்தோடு உருமாறிய வைரஸையும் இந்தத் தடுப்பு மருந்து அழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இது உலக நாடுகளிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பரவிவரும் வெவ்வேறு விதமான உருமாறிய வைரஸ்களையும் தங்களது தடுப்புமருந்து அழிக்கும் திறன் பெற்றுள்ளது என்று இந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE