ஈரோடு: ஈரோட்டில், தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், முகவரி கேட்பது போல நடித்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 8.5 பவுன் நகையை, பைக் கொள்ளையர் பறித்து சென்றனர்.
பவானியை அடுத்த தொட்டி பாளையம், ஊராட்சிக்கோட்டை, மலைரோட்டை சேர்ந்த கருப்புசாமி திருச்செல்வி, 37; இன்னும் திருமணமாகவில்லை. பி.பெ.அக்ரஹாரம் பகுதியில், ஒரு தோல் தொழிற்சாலை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:15 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக, அலுவலகம் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். இந்நிலையில் திடீரென்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 8.5 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு பறந்தனர். நகை பறிக்கும் போது திருச்செல்வியின் கழுத்து, உதட்டில் காயம் ஏற்பட்டது. கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, பைக் கொள்ளையரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE