தேனி: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், புரோக்கராக செயல்பட்ட, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரசீத், 45, நேற்று முன்தினம், தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்து, பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.'ரசீத்தை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மூன்று நாட்கள் விசாரிக்க, நேற்று மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். ரசீத்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், விசாரணைக்காக மதுரை அழைத்துச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE