சங்ககிரி: தேவூரில், தொடர் மழையால், வாழை மரங்கள் சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சங்ககிரி, தேவூர், அரசிராமணி, குள்ளம்பட்டி, வட்ராம்பாளையம், கோணகழுத்தானூர், புள்ளாக் கவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 1,000 ஏக்கரில், கதளி, மொந்தவாழை, நேந்திரம் உள்ளிட்ட வாழை ரக கன்றுகளை, 8 மாதங்களுக்கு முன், விவசாயிகள் நடவு செய்தனர். தற்போது, குலைவிட்டு காய்கள் தயாராகி வந்த நிலையில், தேவூரில், சில நாளாக தொடர்ந்து காற்றுடன் மழை பெய்தது. இதனால், அங்குள்ள வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE