ஓசூர்: சூளகிரி ஒன்றியம், காமன்தொட்டி, பேரிகை, அத்திமுகம், உத்தனப்பள்ளி, சூளகிரி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு, உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், ஏழை, எளிய பயனாளிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது. சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்து, 400 பேருக்கு தலா, 25 வீதம், 10 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வழங்கினார். கால்நடை மருத்துவர் ராஜேஷ், ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி ராஜாராம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் மஞ்சுளா பாலசுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE