ஓமலூர்: முதல்வரை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில், பணிக்கு வந்த விமானியை, முதல்வர் பாராட்டினார். முதல்வர் பழனிசாமி, ஈரோட்டில், தேர்தல் பிரசாரத்தை முடித்து, நேற்று காலை, விமானம் மூலம், சேலத்தில் இருந்து சென்னை சென்றார். முன்னதாக, விமானி கோபிநாத், 35, முதல்வரிடம், 'சேலம் மாவட்டம், குறிச்சியை சேர்ந்தவர்' என, அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, 'தங்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், விருப்பத்துடன் பணியை கேட்டு வந்தேன். இன்று (நேற்று) காலை, எனக்கு ஆண் குழந்தை பிறந்தது' எனக் கூறினார். இதனால், விமானியை, முதல்வர் பழனிசாமி பாராட்டினார். விமானம் புறப்பட்டதும், கோபிநாத், 'மைக்' மூலம், 'தமிழக முதல்வர், அரசு அதிகாரிகளுடன் பயணிக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பின், சேலம் விமான சேவையை கொண்டு வந்த, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி' என, தமிழில் அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE