கரூர்: கரூர் மாவட்ட பூசாரிகள் முன்னேற்ற சங்க, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில பொதுச்செயலாளர் சதீஷ் கண்ணன் தலைமையில் நடந்தது. வீடு இல்லாத ஏழை கிராம கோவில் பூசாரிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும், கோசாலை அமைத்து பசுக்களை பாதுகாக்க வேண்டும். கோவில் பூசாரிகள் நலவாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் நலவாரிய உறுப்பினர் அட்டையை புதுப்பித்து தரவும், புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கப்படும் என தெரிவித்த, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில் களை புனரமைப்பு செய்து, கும்பாபி?ஷகம் நடத்த வேண்டும். மாவட்டந்தோறும் கிராம கோவில் பூசாரிகளுக்கு ஆலய ஆகம பயிற்சி முகாமை, அரசு தரப்பில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE