கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பகுதியில் இருந்து, வீரகுமாரன்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக விவசாயிகள் வெற்றிலை, நெல், வாழை, ஆகியவற்றை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். தற்போது, சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால், விளை பொருட்களை கொண்டு செல்லும் போது, விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE