மல்லசமுத்திரம்: பறவை காய்ச்சல் பீதியால், மோர்பாளையம் சந்தையில் குறைந்த விலைக்கே கோழிகள் விற்பனையாகின. மல்லசமுத்திரம் அடுத்த, மோர்பாளையத்தில் வெள்ளிக்கிழமையன்று, ஆடு, மாடு, கோழிச்சந்தை நடப்பது வழக்கம். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந் மக்கள் கால்நடைகளை விற்று, வாங்கி செல்கின்றனர். நேற்று, ஒரு கிலோ வளர்ப்பு கோழி, 400 முதல், 300 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், 500 முதல், 600 ரூபாய் வரை விற்கும் கோழி, தற்போது குறைவான விலைக்கே விற்பனையானதென விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE