குனியமுத்தூர்:குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கரும்புக்கடை, சாரமேடு, கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கோவைபுதூர் பிரிவு வரையிலும், 85 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி நடந்தது. கரும்புக்கடை அருகே நடந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சுமித்சரண் இதன் இயக்கத்தை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், "கடந்த இரண்டாண்டுகளில் மாநகர் முழுவதும், 10 ஆயிரம் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் நடப்பது தவிர்க்கப்படுகிறது. குற்றங்கள் நடந்தாலும் அடையாளம் காண்பது எளிதாகிறது. பிப்.,ல் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், 150 கேமராக்கள் செயல்பாடு துவங்கும். தொடர்ந்து வரும் ஒவ்வொரு மாதமும், 100 -- 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்.ஐ.,கணேசன், ஏட்டு வடிவேல் மற்றும் கேமராக்கள் பொருத்த உதவியோருக்கு, நினைவு பரிசு வழங்கினார். துணை கமிஷனர்கள் ஸ்டாலின், முத்தரசு மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE