பேரூர்:சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், சமத்துவ பொங்கல் வைத்து, நேற்று கொண்டாடினர்.பூலுவப்பட்டி கிராமத்தில், 46 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குழுக்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் வைத்தனர். கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. கிராமிய பாடல்கள் பாடி, பெண்கள், சிறுமிகள் கும்மி அடித்து, பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE